தீபாவளி அன்று நடைப்பெற்ற நேர்படப் பேசு விவாதத்தில்
பல்வேறு தரப்பினர் தங்களது தரப்பு கருத்துகளை பேசினர்.
இதில் சிலர் பேசிய கருத்துகள் இந்து முன்னனியினருக்கு
உடன்பாடில்லை என்பதால் 23/10/2014 அன்று காலை புதிய தலைமுறை அலுவலகத்தை முற்றுகையிட்டு
இந்து முன்னணியினர் நடத்திய 'நாகரிகமான' ஆர்ப்பாட்டம்.
ஆகா...அருமை அருமை! இந்துத்வாவின் பாரம்பரிய வரலாற்றுக் குறிப்புகளுடன் ஆவேச உரை! இலங்கை வானொலியின் “நல்லதமிழ் கேட்டோம்“ என்ற நிகழ்ச்சியை நினைவுபடுத்துகிறார் சிறப்புச் சொற்பொழிவாளர். சுற்றி நிற்கும் காவலர்கள் அந்தப் பெரியமனிதர்க்கு ஒரு நாற்காலி கொடுத்திருந்தால் இப்படி அவர் சிரமப்பட்டு “உட்கார்ந்து” இருக்கமாட்டார். அவர்களும் இந்து விரோதிகளோ? வாழ்க இந்துத்வா! வளர்க இவர் பண்பாடு! அப்படிப்போடு! அசத்தல் விடியோ கண்கொள்ளாக் காட்சிக்கு நன்றி அய்யா!
ReplyDelete