தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 14 February 2016

50 ஆண்டுகளில் திராவிட கட்சிகளின் ஆட்சி

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு  நிகழ்ச்சியில் 11-02-2016 அன்று " 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகளின் ஆட்சி எப்படி இருந்தது ?" என்கிற விவாதத்தில் சுபவீ

9 comments:

  1. அய்யா வணக்கம். இந்த நிகழ்ச்சியை அன்றே பார்த்து மகிழ்ந்தேன், அறிவார்ந்த விவாதங்கள். அதில் வராத சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன் - http://valarumkavithai.blogspot.com/2016/02/blog-post_14.html வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா முத்துநிலவன் உங்கள் கேள்விகளை இங்கேயே கேட்கலாமே? ஏன் அய்யா உங்கள் இடத்துக்கு வாருங்கள் உன்னிடம் கொஞ்சம் கேள்வி கேட்கவேண்டும் என்று அந்த காலத்து சட்டம்பியார் பாணியில் அழைப்பு விடுகிறீர்கள்? ஏன் இங்கேயே உங்கள் கேள்விகளை கேட்பதற்கு இந்த தளம் உங்கள் கௌரவத்திற்கு ஏற்புடையதாக இல்லையோ? இணையதளங்களுக்கு வாசகர் தாமாகவே முன்வந்து வரவேண்டுமே அல்லாது அவர்களை வாருங்கள் உங்களிடம் கேள்வி கேட்கவேண்டும் என்பது என்ன தர்மமோ தெரியவில்லை.

      Delete
    2. இங்கும் தாராளமாகக் கேட்கலாம்தான். அய்யா சுபவீ அவர்களின் பண்பையும் ஜனநாயக உணர்வையும் அறிந்தவன் நான். ஆனால் அவ்ளோ பெரிய பின்னூட்டத்தை இடுவதை விட என் தளத்தில் கேள்விகளை இட்டு, அவருக்குத் தெரிவிப்பதை “என் வீட்டுக்கு வந்து பதில் சொல்லுங்கள்” என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நானோ அவரோ அப்படி நினைப்பதில்லை. அவரது அன்பான அழைப்பின் பேரில் அவர் வீட்டுக்குச் சென்று உரையாடி வந்தவன் நான். அவரது நேர்மையை நானறிவேன். இது 1-1 கேள்வி-பதிலல்ல நண்பரே. கேள்வி பதில் வழியாகத் தமிழர்களோடு உரையாடுவது, உங்களுக்குப் புரியவில்லை எனில் “கம்” னு இருந்து கவனியுங்கள்.

      Delete
  2. Prof Subavee always very clear & neat, His points are correct & valid . Hats off to you sir I proud to be a Dravidan (DMK).

    ReplyDelete
  3. 2009ஒட திராவிடம் செத்துபோச்சு.. இனி திராவிட வந்தேறிகள் தமிழ்நாட்டில் சூழ்ச்சி செய்ய முடியாது. கடைய சாத்திட்டு கெளம்புங்க. இனி தமிழர் நாட்டை தமிழர் தான் ஆள முடியும்.

    ReplyDelete
  4. திராவிட இயக்கம் தான் எங்களை படிக்க வைத்தது என்றும் நன்றியுடன்!!

    ReplyDelete
    Replies
    1. திராவிட இயக்கம் தான் மக்களை படிக்க வைத்தது என்பது ஒரு பொய்பிம்பமாகும்!.பிறகு கேரளாவில் மக்களை படிக்க வைத்ததற்கு யார் காரணம்? ஆந்திராவில் மக்களை படிக்க வைத்ததற்கு யார் காரணம்?கர்நாடகாவில் மக்களை படிக்க வைத்ததற்கு யார் காரணம்?.திராவிட இயக்கம் வெறுத்து ஒதுக்கப்பட்ட கேரளாவில் தமிழகத்தைவிட அதிகமாக கல்வியறிவு பெற்றுள்ளார்கள்?.வெறும் கல்வியறிவோடு நில்லாமல் Human Development Index,Child survival Index,Maternal Mortality Index,Infant Mortality Index etcஆகியவற்றில் அவர்கள் தமிழகத்தைவிட மிக முன்னேறிய நிலையிலுள்ளார்கள்.அதற்குக் காரணம் அங்கு பகட்டும்,படோடோபமும் கொண்ட திராவிட ஊழல் பெருச்சாளிகள் அங்கு ஆட்சி செய்யாததுதான் காரணம்.இன்றும் சைக்கிளில் செல்லும் சமானிய முதல்வர்களைக் காண்கிறோம்(மாணிக்சர்க்கார்-திரிபுரா,அந்தோணி-கேரளா...),அதோடு கலைஞர்,தளபதி,அம்மா போன்ற அடைமொழிகளை அந்த மக்கள் கேட்டதுமில்லை,அதுபோல அழைத்ததுமில்லை!.இதையெல்லாம் விட ஆச்சரியம் தமிழகம்,கேரளாவை விட கல்வியறிவு&other indexல் இலங்கை முன்னேறியுள்ளது(நீங்களே internetல் verify செய்து கொள்ளுங்கள்).ஆகவே தமிழகத்தில் திராவிட இயக்கத்தால் இவையெல்லாம் நிகழ்ந்ததென்பது திராவிட அரசியல் கட்சிகள் பிழைப்பிற்காக கூறப்படும் போலி வாதமாகும்!.

      Delete
    2. அய்யா சிங்காரம் அவர்களே! ஒரேயடியாகத் திராவிட இயக்கத்தால் ஒன்றுமே நடக்கவில்லை எனும் வாதம் சரியல்ல. நீங்கள் சொல்லும் குறைகளைக் கொண்டு மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு கீழே போய்விட்டது என்பதும் சரியல்ல. பக்தி வளர்ந்திருக்கிற இதே சூழலில்தான், சங்கராச்சாரி கைதை எதிர்த்து, மூன்று முன்னாள் பிரதமர்கள் வடஇந்தியாவில் உண்ணாவிரதமிருந்த சூழலில், தமிழ்நாடு சிறு அசைவுமற்று நின்றதற்கு அந்த ஈரோட்டுக் கிழவனின் வீச்சு காரணமாக இருக்கவில்லையா? அல்லது பிராமணியம் இப்போது நேரடியாக நிற்க முடியாமல் பி.வ., தா.வ. மோதலில் குளிர்காயும் அளவிற்காவது அஞ்சிக்கிடப்பதற்கும் அவரது பணிகள் காரணமில்லையா? அடிப்படையில் பல சிந்தனை மாற்றங்களைப் பெரியாரிடம் கற்றவர்கள் செயல்படுத்தும்போது சில கோட்டைகளை விட்டு வேறுசில கோட்டைகளைப் பிடித்ததே காரணம்.. மற்றபடி ஒரேயடியாக மாட்டடி அடித்து இதன் சிலநல்ல பக்கங்களை மறந்துவிடாதீர்கள்.

      Delete
    3. Nanbar SINGARAM avargale,keralavil padithatharku yar karanam,karnatakavil padithatharku yar karanam,aandhravil padithatharku yar karanam endru ketkirirgal,keralavil irupavarai ketal nanga sri narayana guruval padithom enbargal,karnatakavil irupavargalai ketal nanga basavannaral padithom enbargal..ovvoru oorilum naatilum adhai thatti ezhuppa oruvar irundhar,irukirar..keralavi irupavaNo,karnatakavil irupavano,aandhravil irupavano nan periyaral than padithen endru sollamattan,yenendral avan periyaral padikavillai,aanal tamilnatil peiyaral padithuvitu adhai maraika ninaipadhu kayamaithanam than...

      Delete