தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 21 December 2014

அமித் ஷா வருகையால் தமிழகத்தில் மாற்றம் வருமா ?

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு  நிகழ்ச்சியில் 19-12-2014 அன்று "அமித் ஷா வருகையால் தமிழகத்தில் மாற்றம் வருமா ?"  பற்றிய விவாதத்தில் சுபவீ


4 comments:

  1. பா.ஜ.க மீதான தமிழா்களின் (வாக்களித்த) பார்வை கடந்த 6 மாதத்தில் மாறியிருக்கும் என்று நம்பலாம்.

    அமித் ஷா என்ன செய்வாா் என்றால், மற்ற கட்சி பிரபலங்கள், நடிகா் & நடிகைகள் ஆகியோரை பணத்தை கொண்டும், அதிகாரத்தை கொண்டும் வளைக்க பார்ப்பார்.

    2016 தோ்தல், திராவிடத்துக்கும் இந்துத்துவாக்கும் இடையே நடக்கப் போகும் சித்தாந்த அடிப்படையிலான போா். அதனால்தான் அமீத் ஷாவின் மறைமலை நகர் கூட்டத்தில் தமிழக பா.ஜ தலைவர் ஒருவா் " இது அண்ணாவும் ஈ.வே.ரா வும் மட்டும் பிறந்த மண் அல்ல, ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிறந்த மண்" என்கிறார்.

    திராவிட சித்தாந்தத்தை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமது சுபவீ அய்யா வுக்கு இப்போது வந்துள்ளது.

    ReplyDelete
  2. பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றுவது கடினமே

    ReplyDelete
  3. நிகழ்ச்சியை கண்டேன். மரியாதைக்குரிய சுப வீ ஐயா அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான கருத்து. எப்போதுமே நம்முடைய குறைபாடுகளை ஏற்றுகொள்ளும்போது மட்டுமே வளர்ச்சி அடைய முடியும். திமுக- வை பொருத்தமட்டில், ஒரு சில குறைபாடுகளை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரிடமிருந்து விலகியே இருக்கிறோம் என்பதையும், உட்கட்சி தேர்தலில் நடைபெறுகின்ற குளறுபடிகளையும், ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இது போன்ற குறைபடுகளை எல்லாம் ஏற்றுகொள்ளாமல், ஏதோ வளர்ச்சி பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது என்று ஊடகங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் பேசிக்கொண்டிருப்பது, திமுக – விற்கு மட்டுமல்ல, அதனால் தமிழகத்தின் வளர்ச்சிக்கே முட்டுகட்டையாக அமையும்.(இன்றைய சூழ்நிலையில் திமுக – வினால் மட்டுமே தமிழகதிற்கு நன்மை விளையும் என்று திடமாக நம்புகிறேன்). திமுக – வின் குறைபாடுகளையும் உரியவர்களிடம் எடுத்து சொல்லி, அதற்கான மாற்று வழிகளை தேட முயற்சிக்க செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் தங்களைப் போன்றவர்களுக்கு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். அப்படி செய்யாமல், கண்மூடித்தனமாக ஆதரவு மட்டுமே தெரிவித்துகொண்டிருப்பது, திமுக – வின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் வளர்ச்சிக்கும், எதிராகவே அமையும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. நன்றி.

    ReplyDelete
  4. திராவிட சித்தாந்தத்தை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமது சுபவீ ஐயா போன்றவர்களுக்கு இப்போது வந்துள்ளது.

    ReplyDelete