உங்களையும் தெலுங்கர் என்று
குறிப்பிட்டு ஒரு நூலில் எழுதியுள்ளார்களாமே?
- முத்தையா குமரன், சென்னை -83
விடை: ஆம். அண்மையில்
உதயன் என்னும் நண்பர் ஒருவர் அதனை மின் அஞ்சல் வழி எனக்கு அனுப்பியிருந்தார். அது
குறித்து 03.11.2015 அன்று சென்னையில் நடைபெற்ற கவிஞர் முடியரசன் விழாவில்
பேசினேன்.அதனைக் கீழே தந்துள்ளேன்.
நான் எப்படித்
தெலுங்கன் என்பதை 'அறிவியல் பூர்வமாக' அவர்கள் விளக்கியுள்ளனர். பெங்களூரு
குணாவின் நண்பர் சொன்னதாக அந்தச் செய்தியைத் தமிழின மீட்சி இரண்டாம் பதிப்பில்
வெளியிட்டுள்ளனர் என்பது தகவல்.