தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday 2 October 2015

பாலை


தண்டவாளம் போல் இணைந்து ஓடி
பயணிகளைப் போல் கலைய நேர்ந்தது
ஒவ்வொரு காசாய்ச் சேர்த்துச் சேர்த்து
ஒட்டுமொத்தமாய்ச் செலவிட நேர்ந்தது
கடலின் அலையாய் ஆடித் திரிந்து
நுரையின் வாழ்வாய் உடைய நேர்ந்தது
பாட்டும் இசையுமாய்க் கலந்து கிடந்து
பாலையும்  மழையுமாய்ப் பிரிய நேர்ந்தது
சுகமே வலியாய் மாறிப் போனது

வலியே  சுகமாய் நிலைத்தும் நின்றது!    

2 comments:

  1. அருமை. இயல்பாய் ஓடி வரும் நதியாய் வந்து விழும் வார்த்தைகளால் அமைந்த கவிதை.கருவும் அருமை. வா. நேரு, மதுரை.

    ReplyDelete