தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 3 April 2016

சட்டமன்றத் தேர்தலும் வாக்காளர் கடமையும் - 01-04-2016


11 comments:

  1. பேராசிரியரே,
    எனக்கு ஒன்றை மட்டும் தெளிவு படுத்துங்கள். கடந்த 5 ஆண்டுகளாகவே ஒரு புகைப்படம், சமூக வலை தளங்களில் பகிரப்பட்டுள்ளது, அது ஒரு தினத்தந்தி செய்திதாளின் தலைப்பு பக்கம் . அதில் தலைவர் கலைஞர் டெல்லியிலே மந்திரிகள் எத்தனை என்று பேசுவதும், அதே பக்கத்தில் பிரபாகரன் மரணம் என்றும் வந்தது பற்றி வதந்தி உலவுகிறதே அதை எனக்கு விளக்குமாறு கேட்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. திரு சரவணன் : நீங்கள் குறிப்பிடும் தினத்தந்தி செய்தித்தாள் நகலை நானும் கட்செவி (வாட்ஸ் அப்) ஊடகங்களில் பார்த்தேன்.
      அது, ஈழத்தின் மீதுள்ள காதலால் இப்போது வெளியிடப்படவில்லை. வழக்கம்போல், தேர்தல் நேரத்தில்
      தி.மு.க. மீது வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கம் உடையது.
      உங்கள் நோக்கமும் அதுதானா என்று எனக்குத் தெரியாது.
      இருப்பினும் விடை சொல்ல வேண்டியது கடமை என்று
      கருதியே இங்கு எழுதுகிறேன்.
      ஈழப் போர் நடைபெற்றபோது, இங்கு தேர்தல் நடைபெற்றது.
      அந்தத் தேர்தலில், தி.மு.க. மட்டுமில்லை. எல்லாக் கட்சிகளும்தான் கலந்து கொண்டன. தேத்தல் முடிவை ஒட்டி,
      தில்லியில் பேச்சுவார்த்தை நடந்த நாளில், தேசியத் தலைவர்
      பற்றிய செய்தி வந்தது. அது உண்மையில்லை என்றுதான்
      இன்றுவரை, பழ.நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியோர்
      கூறுகின்றனர். ஆனால் தேர்தல் வந்தவுடன், அந்தச் செய்தியை
      வெளியிட்டுத் தங்களுக்கு வாக்குகள் கிடைக்குமா என்று
      பார்க்கின்றனர். தில்லியில் பேச்சுவார்த்தை நடந்த அடுத்த
      நாள்தானே நாளேடுகளில் அந்தச் செய்தி வந்தது! அதனை
      முதல்நாளே, கலைஞர் மட்டும் எப்படி அறிந்திருக்க முடியும்?

      Delete
    2. தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க் sterlite சிவசங்கரன் அவர்களால் ஷேர் வாங்கபட்டபோது அதன் பின்புலமாக கலைஞர் இருந்ததாக சொல்ல படுவதால்( இந்த ஷேர் இந்த விலை கொடுத்து திரும்ப வாங்குவதற்கு புது பேங்க் ஆரம்பிக்கலாம் என்று மாறன் சொன்னதாக எழுத படுகிறது) சிவந்தி ஆதித்தனார் அதனை மீட்டதால் இப்படி அவர்கள் எழுதலாம் என்பது எனது ஐயம். அப்போது அன்று நடந்த தேர்தல் முடிவு தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு சாதகமாக போக காரணமும் அது என சொல்கிறார்கள். ஜெயலிதா அந்த பேங்க்கினை மீட்க உதவினார் என்கிறார்கள். கலைஞர் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார். இதற்கு உங்கள் விடையை எதிர் பார்கிறேன்.

      Delete
    3. நன்றி அய்யா,

      நான் சுத்தமான தி.க கொள்கை உடையவனும், மேலும் தந்தை பெரியார், கலைஞர், தலைவர் கி.வீரமணி, தாங்கள் என திராவிட தலைவர்கள் மேல் தீராத மதிப்பும் கொண்டவன் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.. மேலும் தங்களை என்னுடைய வாழ்வின் முன்மாதிரியாக எடுத்துகொண்டு தங்களின் உரைகளை பெரியார் டிவி மூலம் பார்ப்பவன், பார்த்துகொண்டிருப்பவன் என்பதையும் பதிய விரும்புகிறேன்....

      Delete
    4. பேராசிரியருக்கு,

      வணக்கம்,

      நான் விக்கிபிடியாவை அலசி கொண்டிருந்த போது 1974ல் தான் கச்சதீவு இலங்கைக்கு மாற்றப்பட்டது என்று உள்ளது... நீங்கள் ஒரு பெட்டியில் (நியூஸ்7) 1979ல் மாற்றப்பட்டது என்றீர்களே?? அதை பற்றி தெளிவுபடுத்துங்கள்... (நண்பர்களுடன் வாதிக்க தேவை படுகிறதே அன்றி வேறு எதுவும் இல்லை)

      நன்றி...

      Delete
  2. ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது, தமிழகத்தில் நடந்தது பற்றி அறிய எந்த நூலை படிக்க வேண்டும்....

    ReplyDelete
    Replies
    1. திரு சரவணன்: ஈழப் போர் நடைபெற்ற வேளையில் இங்கு
      நடந்தது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள, நான் எழுதியுள்ள
      "ஈழம்-தமிழகம்-நான், சில பதிவுகள்" நூலைப் படியுங்கள்.
      வெளியீடு: தலைமைக் கழகம், தி.மு.க. அறிவாலயத்தில்
      கிடைக்கும்.

      Delete
  3. Subavee Sir,

    Would like to subscribe your magazine. Pls guide, how to do?

    ReplyDelete
    Replies
    1. திரு கவுதமன் : எங்கள் இதழுக்கு ஆண்டுக் கட்டணம் செலுத்த
      விரும்புவது அறிந்து மகிழ்ச்சி. அன்புகூர்ந்து
      +91 44 42047162 என்ற எண்ணில் எங்கள் அலுவலகத்தைத்
      தொடர்பு கொள்ளவும்.

      Delete
  4. மதிப்பிற்குரிய சுபவீ அய்யா அவர்களே, தாங்களும் இக்கணக்கை நிறைய இடத்தில் சொல்லி விட்டிடீர்கள், எனக்கு புரிந்தது, ஆனாலும் இதை என் அனைவரும் ஊழல் என்று கூறுகிறார்கள், அரசியல் வாதிகளை சொல்லவில்லை, பொது மக்களை சொல்லறேன், அது ஏன் என்றும் நீங்களே விளக்கம் தாருங்கள்

    ReplyDelete
  5. ஓர் இடத்தில், அய்யா திரு. பழ. கருப்பையா அவர்கள், “அலிபாபாவும் முப்பத்தி மூன்று திருடர்களும்” என்று குறிப்பிட்டார். ஆனால், கதைப்படி,அலிபாபா – நல்லவர் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete