தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 24 July 2016

யுவராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி சுப.வீ .மனு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி பிணையில் வந்துள்ள யுவராஜின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் நேற்று காவல்துறை ஆணையரை சந்தித்து மனு அளித்தார்.  

படங்கள்: நக்கீரன் 


கோகுல்ராஜ் வழக்கில் யுவராஜ் சரணடைவதற்கு முன்பாக தனது வாக்குமூலத்தை ஆடியோ வடிவில் ’வாட்ஸஅப்’பில் பல ஊடகங்களுக்கு அனுபினார். தற்போது அதே பாணியில் அண்மையில் ஒரு வாட்ஸ்அப் குரல் பதிவை வெளியிட்டுயிருந்தார். அதில் திமுக தலைவர் கலைஞர் மீதும், விடுதலைச் சிறுத்தைகள் தொல்.திருமாவளவன் மீதும், தன் மீதும் எச்சரிக்கை விடும் தோனியில் பேசியதோடு, கொலை மிரட்டலையும் விடுத்திருந்தார். சமூக அமைதியைச் சீர்குலைக்கக் கூடிய இத்தகைய செயலுக்காக சட்டப்படி யுவராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

9 comments:

  1. ஆணவத்தின் உச்சம் அந்த உரை. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு செத்துப் போயிற்று !

    ReplyDelete
  2. தனஞ்செயன்25 July 2016 at 12:51

    உன் ஜாதி என்ன அவர் ஜாதி என்ன? ஏணி வச்சாலும் எட்டாது!.அப்புறம் என் அவரை வீண் வம்புக்கு இழுக்கற?.உன்னோட கருணாவோட கயமைத்தனத்தனங்களை தோலுரித்துக்கட்டினத்திற்கு ஏன் அவர் மீது இவ்வளவு எரிச்சல் உனக்கு?.பிழைக்கறத்திற்கு எவ்வளவோ வழி இருக்கு அப்புறம் ஏன் இப்படியான ஈனப்பிழைப்பு உனக்கு கருணாவுக்கு?

    ReplyDelete
  3. ப.கிருஷ்ணராயன்25 July 2016 at 14:37

    உன்னோட பாட்டன்,முப்பாட்டன் எல்லாம் யுவராஜ் பாட்டன்,முப்பாட்டன் தோப்புல எஜமான் எஜமான்னு சுற்றிசுற்றி வந்து பொறுக்கித்தின்னதை எல்லாம் மறந்துட்டு ஆணவத்தோடு பேசாதே.முன்புபோல சவுக்கடியும் சாணிப்பாலும் இல்லாததால் உனக்கெல்லாம் திமிர் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.

    ReplyDelete
  4. There is nothing wrong in Yuvaraj's statement. Subavee is just overstating the report and try to make some nonsense out of it.

    ReplyDelete
  5. கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் என் ஜாதி உன் ஜாதி என்றெல்லாம் பேசுகிறார்களே? இவர்கள் இன்னும் பரிணாம வளர்ச்சியே அடையவில்லை.
    தந்தை பெரியார் அன்று எவ்வளவு மனம் வருந்தி இருப்பார் என்பது இந்த சாதிவெறியர்களின் பேச்சுக்களை பார்க்கும்போது புரிகிறது.
    இந்த சாதிவெறியர்கள் எல்லாரும் தமிழ் தேசியவாதிகள் என்று தம்மை தாமே கருதியும் கொள்கிறார்கள்.
    தமிழர் வாழ்வில் புகுந்து விட்ட இந்த ஜாதி உணர்வு தமிழரை எல்லா பக்கத்திலும் தோற்கடித்து கொண்டே வருகிறது.
    இப்போது புரிகிறதா ஈழவிடுதலை போராட்டம் தோல்வியில் முடிந்த காரணம்? அங்கும் இதுதான் நடந்தது.
    ஜாதி வெறியர்களின் இன உணர்வு என்பது ஒரு முகமூடிதான்.
    இந்த கோகுல்ராஜ் ராமதாஸ் போன்ற சாதிவெறியர்கள் வரிக்கு வரி ஈழம் தமிழ் போன்ற சொற்பிரயோகம் செய்வது எல்லாம் தங்கள் ஜாதிவெறியை அணையவிடாமல் காப்பதற்குத்தான்
    திராவிடஇயக்கத்தின் இனமான உணர்வுதான் தமிழரின் தன்மானத்துக்கும் உரிமைக்கும் அரணாக விளங்கும்.

    ReplyDelete
  6. Congratulations @subavee sir

    ReplyDelete
  7. தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றுக்கெதிரான அறிக்கைகள் கூட அடங்கி, மவுனம் வலுப்பெறத் தொடங்கி விட்டது. அ.தி.மு.க. நேரடியாகவே சாதி ஆதிக்க சக்திகளுக்குத் துணை நிற்கிறது. தி.மு.க. மட்டும் கண்டிக்கிறது. பெரியார் இயக்க வாசனையைக்கூட தமிழ் மண்ணிலிருந்து ஒழிக்கும் பொருட்டு, சாதிச் சங்கங்களை கூர் தீட்டி விடுகிறது பா.ஜ.க.

    இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் ஆகியோரது கொலைகளில் வன்னியர், கவுண்டர், தேவர் என்ற தமிழகத்தின் மூன்று பெரும் ஆதிக்க சாதிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று சாதிகள் மட்டுமின்றி, பொதுவில் எல்லா ஆதிக்க சாதிகளுமே தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான மனோபாவத்தில் ஒன்றுபட்டிருக்கின்றனர் என்பதே உண்மை. ஆகையினால், சாதி கூடாது என்று தனிப்பட்ட முறையில் கருத்து கூறுவோர் கூட, சாதி ஒழிப்பைப் பேசுவதற்கான தைரியம் இல்லாமல், காதலை மதிக்குமாறு சாதி வெறியர்களிடம் ஈன சுரத்தில் வேண்டுகோள் விடுகின்றனர். ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமெனக் கோருகின்றனர்.

    ஏற்கெனவே தீண்டாமைக் குற்றங்களுக்காகப் பதியப்படும் வழக்குகளில் 10% கூட தண்டிக்கப்படுவதில்லை. தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, வன்கொடுமைச் சட்டத்தில் புதிய பிரிவுகள் சேர்க்கப்படுகின்றனவேயன்றி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. காரணம், ஓட்டுக் கட்சிகள் மட்டுமின்றி, அதிகார வர்க்கமும் நீதித்துறையும் சாதிவெறியர்களுக்குத் துணை நிற்கின்றன. கயர்லாஞ்சி படுகொலை வழக்கில் கீழ்நிலையிலிருந்து மேல்நிலை வரையிலான போலீசு அதிகாரிகள் தலித்துகளாக இருந்தபோதிலும், குற்றவாளிகள் தப்புவிக்கப்பட்ட கொடுமையை ஆனந்த் தெல்தும்ப்டே அம்பலப்படுத்தியிருக்கிறார். நேர்மையான அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் விஷ்ணுப்பிரியாவுக்கு நேர்ந்த கதிதான் அவர்களுக்கு நேர்கிறது.


    ஆனால் எப்போதும் ஆதிக்க சாதி வெறியே ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க முடியாது.ஒடுக்கப்பட்ட சமூகம் விழித்துக் கொண்டு விட்டது.

    அதன் எதிர் வினையை பெரியாரின் மண்ணில் காணப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    ReplyDelete
  8. யுவரஜ் போன்ற சாதிவெறியர்கள் பார்ப்பனியத்தின் அடிமைகளாக இருந்துகொண்டு தான் சார்ந்தசாதி உயர்ந்த என்று பெருமைபீத்தகிராக்கியாக வலம்வருவதே இந்துத்வா பார்ப்பனியத்தை கட்டி காப்பதற்கே ஆனால் உண்மையில் பார்ப்பானின்மனுதர்ம சட்டப்படி இந்த யுவராஜ்நாயும் சூத்திரனே! தந்தை பெரியாரோ இந்த நாயின் சூத்திரப் பட்டத்தை ஒழிக்க தந்தை பெரியாரும் அவரை தொடர்ந்து திராவிட இயக்கத்தாராகிய நாங்களும் இன்றுவரை போராடிக் கொண்டிருப்பதை இந்த சாதிவெறியர்கள் உணர்ந்துகொள்ளாதது வேதனையே! தந்தைபெரியாரின் கருத்துக்கள் தமிழர்களிடம் சென்றடையாமல் கட்டிக்காப்பதில் கவனமாக பார்ப்பானைவிட போலிதமிழ்தேசிய வியாதிகளும் சாதிவெறிபிடித்த அமைப்புகளும் முன்னிலை வகிக்கின்றன. கடைசியாக ஒருவார்த்தை;இப்படிபட்ட கேடுகெட்ட கழிசடைகளை பார்க்கும்போது பாவேந்தரின் பாடல்தான் நினைவுக்குவருகிறது... இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றார் வாயடியும் கையடியும் ஓய்வதென்னால்?

    ReplyDelete