தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 6 January 2016

மதுவா? மதுவிலக்கா?

30-12-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் "தமிழகத்தில் மதுவிலக்கு பற்றிய கருத்துக்கணிப்பு" நிகழ்ச்சியில்  சுபவீ


2 comments:

  1. கணேஷ்வேல்6 January 2016 at 16:33

    "நாணுடைமை" யே மாந்தரின் சிறப்பு என்று கூறிய திருவள்ளுவரை, சுபவீ அய்யா மேற்கோள் காட்டியது மிகவும் அருமை.

    "ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
    நாணுடைமை மாந்தர் சிறப்பு."

    "சாராயத்தை விட சாதி கொடிது" என்று சாதியைச் சாடியது அதனிலும் அருமை !!!

    ReplyDelete
  2. கணேஷ்வேல்6 January 2016 at 16:44

    சுபவீ அய்யா குறிப்பிட்ட நாணுடைமை அதிகாரத்தில் உள்ள குறள்களும் அதன் விளக்கங்களும்!

    நாணுடைமை
    ------------


    திருக்குறள் :
    கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
    நல்லவர் நாணுப் பிற.

    பொருள் :
    ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

    திருக்குறள் :
    ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
    நாணுடைமை மாந்தர் சிறப்பு.

    பொருள் :
    உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.

    திருக்குறள் :
    ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
    நன்மை குறித்தது சால்பு.

    பொருள் :
    உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.

    திருக்குறள் :
    அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
    பிணியன்றோ பீடு நடை.

    பொருள் :
    நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும். அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.

    திருக்குறள் :
    பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
    குறைபதி என்னும் உலகு.

    பொருள் :
    தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்.

    திருக்குறள் :
    நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
    பேணலர் மேலா யவர்.

    பொருள் :
    பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்.

    திருக்குறள் :
    நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
    நாண்துறவார் நாணாள் பவர்.

    பொருள் :
    நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.

    திருக்குறள் :
    பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
    அறநாணத் தக்க துடைத்து.

    பொருள் :
    வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்.

    திருக்குறள் :
    குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
    நாணின்மை நின்றக் கடை.

    பொருள் :
    கொண்ட கொள்கையில் தவறினால் குலத்துக்கு இழுக்கு நேரும். அதற்கு நாணாமல் பிறர் பழிக்கும் செயல் புரிந்தால் நலமனைத்தும் கெடும்.

    திருக்குறள் :
    நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர்மருட்டி அற்று.

    பொருள் :
    உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை.

    ReplyDelete