தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 24 July 2018

கறுப்பும் காவியும் - 14 

"கறுப்புக் கடவுள்


ஒருவன் எந்த வருணத்தில் பிறந்தவன் என்று முத்திரை குத்தப்படுகின்றானோ, அதே வருணத்திலேயே வாழ்ந்து, வளர்ந்து மடிந்து போக வேண்டும். இந்த வருணப் பாகுபாடு, தலைமுறை தலைமுறையாகத் தொடரும். இதுதான் உண்மை. ஆனால் இந்த உண்மை அச்சுறுத்துவதாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகச் சில சமாதானங்கள் கவனமாகக் கூறப்பட்டுள்ளன.

வருணம் என்பது பிறப்பினால் இல்லை, சத்துவ, ராஜஸ, தாமஸ குணங்களால் (sattuva,rajas, tamas Gunas) தீர்மானிக்கப்படுவதால், மேலேறவும், கீழிறங்கவும் வாய்ப்புகள் உள்ளன என்று மனு கூறுவதாக ராதாகிருஷ்ணன் சொல்கிறார் ("Manu admits the possibility of ascent and decent").  அந்த வாய்ப்புகள் கூட அவாள் மூவருக்கும்தான். நான்காவது குணம் பற்றி பேச்சே இல்லை பாருங்கள். நம் பழைய திரைப்படப் பாடல் ஒன்று கூட,  "கல்வியா, செல்வமா, வீரமா?" என்று போட்டி நடத்தும். உழைப்பைப்  பாட்டில் கூடச் சேர்க்கவில்லை. சரி விடுங்கள்சத்திரியராகப் பிறந்த விசுவாமித்திரர் தவம் செய்து ராஜரிஷி ஆனதும், பார்ப்பனராகப் பிறந்த பரசுராமன் ஆயுதம் ஏந்தி சத்திரியர்களைப் படுகொலை செய்ததும்  அந்த அடிப்படையில்தானோ என்னவோ


வருணம் சாதியாக உருவெடுத்தபின், இந்தப் பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது. எந்தக் குணத்தின் அடிப்படையிலும்,  எந்தத் திறமையின் அடிப்படையிலும் சாதி தீர்மானிக்கப்படுவதில்லை. பிறப்பு ஒன்றே அடிப்படை. பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஏற்றத்தாழ்வு என்பது காவியின் அடித்தளம். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது கறுப்பு வரலாற்றின் முதல் குரல்!

இந்து தருமம் மாற்றவே முடியாதது என்பதில்லை என்கிறார் ராதாகிருஷ்ணன். ஆனால் அதனை யார் மாற்ற முடியும் என்பதையும் விளக்கிச் சொல்கின்றார்

          "ஆட்சியாளர்கள் தருமத்தை நிர்வகிக்கலாமே தவிர 
           அதனைச்  செல்லாது என்று அறிவிக்கவோதிருத்தவோ 
           அனுமதிக்கப்பட மாட்டார்கள். பார்ப்பனச் 
           சிந்தனையாளர்களே மாற்றத்தை அறிமுகப்படுத்தினர்

           (The rulers are not allowed to  annul or alter Dharma., but are
             only to administer it.The changes in the Dharma are 
             introduced by the BRAHMIN thinkers) 

ஆக்கல், காத்தல், அழித்தல் எல்லாவற்றையும் அவர்கள் தங்கள் கைகளிலேயே வைத்துக் கொண்டார்கள்ஏன் பிறருக்கு அந்த உரிமை இல்லை என்பதையும் மனு சொல்லிவிட்டாராம்.

          "எண்ணற்ற முட்டாள்களின் கருத்துகளை விட
           ஓர் அறிவாளியின் சிந்தனையில் உதித்த  முடிவு,  
           கூடுதல் தகுதியுடையதாகும்

           (The considered conviction of one wise man is more 
            worthy than the opinions of a myriad fools) 

நம் நாட்டில், நம் உழைப்பில், நம்மோடு வாழ்ந்து கொண்டு நம்மையெல்லாம் முட்டாள்கள் என்று சொன்னவர்தான், நமக்கும் சேர்த்து, நம் நாட்டிற்கே குடியரசுத் தலைவராக இருந்துள்ளார்கேட்டால், அவர் சொல்லவில்லை, மனு சொல்கிறார் என்று சொல்லிவிடுவார்கள்.

மனு என்பவர் ஒரு தனி மனிதர் இல்லை. அது ஒரு குழுவின் பெயர் என்பார் அம்பேத்கர். அதாவது ஒரு பார்ப்பனக் குழுவினர், கி,மு 2 அல்லது 3 ஆம்  நூற்றாண்டில், புஷ்யமித்திரன் என்னும் பார்ப்பனர் ஆட்சியில்  இயற்றிய வைதீக-வேத  மதத்திற்கான சட்டமே அது. அந்தச் சட்டம்  இன்னும் இந்நாட்டை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டு கொண்டிருக்கிறது

1794 ஆம் ஆண்டு, சர் வில்லியம் ஜோன்ஸ் என்னும் ஆங்கிலேய நீதிபதி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு மட்டுமின்றி, அதன் அடிப்படையிலேயே, 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்துச்  சட்டம் (The Hindu Law) என்பதையும் உருவாக்கினார்அதனால்தான், "வெள்ளைக்காரன் நமக்கெல்லாம் இந்து என்று பெயர் வைத்தானோநாம் பிழைத்தோமோ....இல்லையேல் ஆளுக்கொரு திசையில் பிய்த்துக் கொண்டு போயிருப்போம்" என்று சங்கராச்சாரியார் தன் நூலில் (தெய்வத்தின் குரல்) ஆதங்கப்படுகிறார்

மனு நீதி என்பது சாதிக்கொரு நீதி சொல்லும் நூல். பொது சிவில் சட்டம் வேண்டும் என்று இன்று ஒரு குரல்  கேட்கிறது. மனு நீதியோ, குற்றவியல் சட்டத்தையே பொதுவாக வைக்கவில்லை. இந்தக் குற்றத்தை, இந்தச் சாதிக்காரன் செய்தால் இது தண்டனை, அந்தச் சாதிக்காரன் செய்தால் அதற்கு வேறு தண்டனை என்று பாகுபாடு காட்டி, அந்தப் பாகுபாட்டை நீதி என்றும் சொல்லிய நூல் உலகிலேயே மனு நீதியாகத்தான் இருக்க முடியும்

மனு நீதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுலோகங்கள்  உள்ளன. சாதி அடிப்படையிலும், பால் அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிப்பதும், அவற்றிற்கேற்பத் தண்டனைகளை வழங்குவதும் இந்நூலின் உள்ளடக்கம். தன் சமூகத்தைத் தவிரப் பிற சமூகங்களில் பெண்கள் மணம் முடிக்கக்கூடாது என்று வெளிப்படையாகவே (இயல் 3 - சுலோகம் 13, 14) இந்நூல் பேசுகின்றது. இதனைத்தான், தன் நூல் முழுவதும் மேற்கோளாக டாக்டர் ராதாகிருஷ்ணன் எடுத்துக் காட்டுகின்றார்

தான்தான் இந்த உலகையே படைத்ததாகக் கிருஷ்ணர் சொல்வதை நாம் பகவத் கீதையில் பார்க்கிறோம். ஆனால் அந்தக் "கறுப்புக் கடவுளையே" ஆரியர்கள்தாம் படைத்தனர் என்கிறார் ராதாகிருஷ்ணன். அவர் வரிகளிலேயே அதனைப் படிப்போம்:- 

         "ஆரியர்கள், தாழ்ந்த தரமற்ற நாகரிகம் கொண்ட மக்களைச்  
          சந்தித்தது முதல்வேறுபட்ட அப்பெரும் 
          மக்கள் தொகையினர், சமூக, ஆன்மிகத் திசைகளில் 
          வளர்ச்சியடையச் சில வழிமுறைகளைக் கண்டனர்
          ஆரியரல்லாத அந்தக் கறுப்பு மக்களிலேயே சிலரைக்  
          கூட ஏற்றுக்கொண்டு, தந்தைமைக் குணமுடைய 
          கடவுளின் செய்திகளைக் கூறுமாறு அவர்களை
          ஆரியர்கள் உருவாக்கினார்". 

          (From the time the Aryans met the peoples of a lower grade of 
           civilization, they devised ways and means by which the 
           different portions of the population could develop in social, 
           spiritual directions. The Aryans even accepted  a non-Aryan 
           representative of the "black" peoples and made him deliver the      
          message of the fatherhood of God) 

The Aryans even accepted என்னும் தொடரைக் கவனியுங்கள். கறுப்பர்களைக் கூட (போனால் போகிறது என்று) ஆரியர்கள் கடவுளின் செய்திகளைக் கூற அனுமதித்தார்களாம். அந்தக் 'கறுப்பு மக்களுக்கான கடவுள்' யார்அடுத்த வரியிலேயே "கிருஷ்ணா" என்று கூறிவிட்டு, அந்தக் கறுப்புக் கடவுளைப் பற்றி என்னவெல்லாம் அவர்  கூறுகின்றார் என்பதைக் 'கிருஷ்ண பக்தர்கள்' கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்

                                                                               (தொடரும்)

நன்றி: ஒன் இந்தியா

3 comments:

  1. இரண்டாம் உலகப்போருக்கு பின்பு உலகம் முழுவதும் ஜெர்மானியர் வசமாகி விடும் என்பதால் பிராமணர்கள் சேவை சாப்பிட்டுக்கொண்டே சந்தோசமாக ஜெர்மன் மொழியை கற்றுக்கொள்ள தயாராகினர் என்று கம்யூனிச தோழர்களின் வரலாறு குறிப்புகள் சொல்லியது.
    ஹிட்லர் மக்களை கொன்று குவிக்க ஆர்டர் கொடுத்த ஹென்ரிச் ஹிம்மர் என்பவர் பகவத் கீதையை தன்னிடம் வைத்திருந்தார். ஆரிய தாய்நாடான ஈரானின் முதல் எதிரி இஸ்ரேல் என்பது அனைவரும் அறிவோம். இது உலக இன வரலாறு குறிப்பு.

    உலகத்தில் இரண்டு இனங்கள் மூளையை செம்மையாக பயன்படுத்திய பிறகு தோன்றியவை. ஒன்று ஆரியம் மற்றொன்று திராவிடம். திராவிடம் என்பது தமிழினமே என்பதில் ஐயம் இல்லை. திராவிடத்தின் இயல்பு கொள்கையால் அதாவது தத்துவங்களால் மனிதர்களை திருத்துவது. ஆரியத்தின் கொள்கை தந்தை வழி மனிதர்களை அதாவது சூத்திரர்களை உருவாக்கி உலகத்தை ஆளுவது. ஆரியம் ஈரானிலும் திராவிடம் இஸ்ரேலிலும் ஆரம்பமானது. இந்த இரண்டு விதமான மனித குழுக்களும் உலகெங்கும் சென்று அங்கெங்கே இருந்த மனிதர்களை தங்களுடைய கொள்கைக்கேற்ப உருவாக்கினர். இன்றைய உலகத்தில் வாழும் மனிதன் இரண்டும் கலந்து ஆரியர்களின் தந்தை வழி மரபாலும் திராவிடர்களின் தத்துவத்தாலும் உருவாக்கப்பட்டவர்கள்.
    பெரியாரின் தத்துவங்களில் ஒன்று நாம் அனைவரும் சூத்திரர்கள் அதாவது தே..பசங்கள்தான் என்பதாகும். இது சற்று கடினமான உண்மை.

    இங்கே சூத்திரன் ஐரோப்பாவில் ஸ்லாவ். ஆம், அடிமை என்ற சொல் அதாவது ஸ்லாவ் என்ற சொல்தான் அவ்வினத்தை குறிக்க கிழக்கு ஐரோப்பாவில் பயன் படுத்தப்படுகிறது. இது சூத்திரன் என்றே அர்த்தம் உடையது. ஆகவேதான் ஆரிய ஜெர்மனியும் சில தீவிர சூத்திரர்களை கொண்ட ரஷ்யாவும் இணைய விரும்புகிறது.
    ஜெர்மானிய ஆரியர் ட்ரம்ப் சைனாவை எப்படி ஓரம்கட்டப்பார்க்கிறார் அதற்கு ரஷ்யாவின் உதவியை நாடுகிறார் என்பது தினச்செய்தி.

    இன்றைய நிலையில் சூத்திரன் மற்றும் தீவிர சூத்திரன் என்ற சொல்லாடல் அவசியமாகிறது.
    சூத்திரர்களும் தீவிர சூத்திர்களும் கால ஓட்டத்தில் இணைகிறார்கள் அதாவது திருமணங்கள் இணைக்கின்றன. இன்னும் சில நாள்களில் வேறுபாடு மறையும் என்று நம்புவோம். ஆனால் ஒவ்வொரு சாதியிலும் இருக்கும் தீவிர சூத்திரர்கள் பிரிவுகளையே விரும்புகிறார்கள். சாதியாக மொழியாக இனமாக பிரிக்க முற்படுகிறார்கள்.

    யூதர்கள் சாதாரண சூத்திரர்கள் அல்லது திராவிடர்கள்.அவர்களின் சிந்தனையில் நேர்மையும் உண்மையும் அன்பும் இருப்பதாலேயே இயேசுவும் மார்க்சும் லெனினும் இன்றைய உலகத்தை இணைக்கும் கூகுள் பேஸ்புக் முதலாளிகளும் அணு ஆயுதம் பயன்படுத்தியபோது இதற்காகவா நான் கண்டுபிடித்தேன் என்று கதறிய ஐன்ஸ்டீனும் சீன கம்யூனிசத்தின் தந்தை டெங்கும் மற்றும் எண்ணற்ற நல்லவர்களும் தோன்றுகிறார்கள். சீனா இன்று வல்லரசாக முழுமையான காரணம் இஸ்ரேல். இஸ்ரேலின் டெக்னாலஜி முழுமையாக சீனாவுக்கு கிடைத்தது. ஆகவே கம்யூனிசம் அதாவது சோசியலிசம் வென்றது. இதனை சீனா இஸ்ரேல் ரிலேசன்சிப் என்று கூகுளில் டைப் செய்து அறியலாம். அதேபோல இஸ்ரேல் ஆப்பிரிக்க யூனியனோடு இணைய எத்தனையோ முயற்சிகள் எடுத்துக்கொண்டு இருக்கிறது. மறுபுறம் ஆரிய இனக்குழுவில் இருந்து ஹிட்லரில் ஆரம்பித்து ட்ரம்ப் வரை பாசிசத்தை நேசிப்பவர்களே வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
  2. ஹிட்லரை போல சிந்தனை ஓட்டம் உடையவர்கள் தமிழகத்திலும் தோன்றுகிறார்கள்.
    பாரிசாலன் என்பவர் தமிழ்தேசியம் வெல்லவேண்டும் என்றால் வேற்று மொழி பேசுபவரை அடிக்க வேண்டும் என்கிறார். யூதர்களை பிராமணர்கள் என்கிறார். உலகத்திலேயே ஆரியன் என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியது ஈரானியர்கள்தான் என்பது வரலாறு. ஆனால் இந்த வரலாற்றை யூதபிராமணர்கள் என்ற சொல்லாடலை பயன்படுத்தி ஆரியர்கள் யூதர்கள் என்பது போல மாற்ற முற்படுகிறார். ஹிட்லரே தம்மை ஆரியன் என்று சொல்லும்போது பாரிசாலன் அவர் அறியாமல் சொல்லிவிட்டார் என்கிறார். இது ஒரு தீவிர சூத்திர சாதியை சேர்ந்தவர்களின் மக்களை குழப்பும் செயல்.

    ஹிட்லரை அப்பாவி என்று சொல்லும் இன்னும் ஒரு யூடியூப் சானல் தமிழ் சிந்தனையாளர் பேரவை. இந்த லிஸ்ட் அப்படியே ஹிட்லர் யாரெல்லாம் ஆரியர்கள் என்றும் அவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை போலவே இருக்கிறது.
    ஹிட்லரின் யாரையெல்லாம் கொல்ல வேண்டும் என்ற லிஸ்டில் கம்யூனிஸ்டுகள், யூதர்கள், ஸ்லாவ் என்று நீளுகிறது. அதே போல இங்கே லிஸ்ட் போட்டு தமிழ் தேசியத்தில் வர தகுதி அற்றவர்கள் என்று கம்யூனிஸ்டுகளை சேர்த்து யூத பிரமாணர்கள் என்று தமிழ் சிந்தனையாளர் பேரவை குழப்ப செய்கிறது.

    தீவிர சூத்திர சமூகத்தினர் அவ்வாறு செய்வதால் தங்களது சொத்துகள் மற்றும் நிலங்கள் பாதுகாக்கப்படுவதாக நம்புகிறார்கள். கம்யூனிசம் நிலங்களை பறித்து கொள்ளும் என்று அஞ்சி அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் நில அளவு மற்றும் எண்ண ஓட்டங்களை பார்த்து அவர்களுக்குள் இணைந்தே இருக்கிறார்கள். நாம்தான் நமக்குள் சண்டையிட்டு கொள்கிறோம் அல்லது சண்டையிடும்படி இந்த ஒவ்வொரு சாதியிலும் இருக்கும் தீவிர சூத்திர சாதிகளால் தூண்டி விடப்படுகிறோம். இன்று பார்ப்பணியம் மற்றும் தீவிர சூத்திர சாதிகள் உலகெங்கும் சைனாவை எதிர்க்கிறது. அதன் ஒரே நோக்கம் கம்யூனிசம் வளராமல் தடுப்பது. நாம் அதாவது சாதாரண சூத்திரர் சீனாவோடு இணைவது நமது தலைமுறையை காக்கும். சோசியலிசம் மட்டுமே தலைமுறைகளை காக்கும். இன்று அனைவருமே பலசாலிகளே. சீனா பலத்தோடு நிற்கிறது. அதன் பலத்தை தகர்க்க வேண்டும் என்பதே முதலாளித்துவத்தின் நோக்கம்.

    இந்தியாவில் மேல்சாதிகள் முதலாளித்துவ கொள்கை உடையது. திறமைசாலிகள் மட்டுமே வாழ வேண்டும் என்ற கொள்கையை உடைய முதலாலித்துவம் இந்த அழகிய உலகத்தையே அழிக்கக்கூடியது. ஏனெனில் அந்த தத்துவம் போட்டி என்ற நல்ல விஷயத்தை கொடுத்தாலும் பொறாமை என்ற தீய விஷத்தையும் கலந்து விடுகிறது. இங்கே பார்ப்பணரும் தீவிர சூத்திரரும் முதலாளித்துவம் அழியாமல் இருக்க பாடுபடுகிறார்கள்.
    நம்மை போல சாதாரண சூத்திரர்களின் அல்லது திராவிட தமிழர்களின் நோக்கம் சீனாவோடு இணைவதாக இருக்க வேண்டும். அது நம்மை பலப்படுத்தும். சீனாவால் நாம் இலங்கையில் தோற்றோம் என்று முதலாளித்துவவாதிகள் நம்மை குழப்பி அவர்கள் பக்கம் இழுக்க பார்ப்பார்கள். இப்போது கூட ஸ்டெர்லைட் போராட்ட பின்னனியில் சைனா இருக்கிறது என்று ஆதாரமற்ற பொய்கள் யூடியூபில் பரவ விடுகிறார்கள். நாம்தான் மன தெளிவோடு முடிவெடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. கடவுள் தான் உலகை படைத்தார் என்று சொல்லும் கூட்டதில் கடவுளையே நாங்கள் தான் படைத்தோம் என்று அக்கூட்டத்தில் ஒருத்தர் சொல்லிருக்கிறார்.ஒன்று மட்டும் புரிகிறது கடவுளை மனிதன் தான் படைத்தான் என்று.கடவுள் யார் என்பதை பார்ப்பனர்கள் சொல்லிய கூற்றுகளில் இருந்து ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் அய்யா அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete