முன்பெல்லாம் நடுத்தட்டுக் குடும்பங்களில்
எப்போதாவதுதான் தொடர் வண்டிகளில் வெளியூர்ப் பயணம் இருக்கும். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை! ஒரு வாரத்திற்கு முன்பே அதற்கான தயாரிப்பு வேலைகள் தொடங்கும். பெரும்பாலும் உணவு, தண்ணீர் (அதற்கென்று
ஒரு கூஜா) எல்லாவற்றையும் உடன் எடுத்துக்கொண்டு போகும் பழக்கம் இருந்தது. ஆக மொத்தம், பயணம் செய்கின்றவர்கள்
எண்ணிக்கையை விட, அவர்கள் கொண்டுபோகும் பொருள்களின்
எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். சென்னைக்கோ, திருச்சிக்கோ
வந்து இறங்கியவுடன், தொடர்வண்டி நிலைய நடைமேடையில்,
சிவப்புச் சட்டையுடன் நிறையப் பேர் ஓடி வருவார்கள். சுமை
தூக்கும் அந்தத் தொழிலாளர்களுக்குப் “போர்ட்டர்கள்”
என்று பெயர். எனக்கு நினைவு இருக்கிறது.
நான் சிறுவனாக இருக்கும்போது, என் அப்பா அவர்களோடு
பேரம் பேசி முடிக்க, அவர்களில் ஒருவர் தன் தலையிலும், தோளிலும் பொருள்களை
எடுத்துக் கொண்டு
ஓடும்போது, வெறும் கை வீசிக்கொண்டு நடக்கும் எங்களால்
அவர்களுக்கு இணையாக ஓட முடியாது.
மேலும் படிக்க
No comments:
Post a Comment