தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 19 March 2014

நாயக்கர்கள் காலம்

நாயக்கர்கள் காலம்-பேராசிரியர் சுப. வீரபாண்டியன் 
நாள்: 02.03.2014
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை.

2 comments:

  1. வணக்கம். தங்கள் உரையைக் கேட்டேன்.மிக அருமை.ஆனால் எனக்கு அதில் சில சந்தேகங்கள் உண்டு.1.ஆங்கிலேயர் வருகையினால்தான் நாம் அறிவு பெற்றோம் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.ஆனால் ஏசு பிறப்பதற்க்கு பல ஆயிரம் ஆண்டுகல்லுக்கு முன்பே நாம் நாகரீகமான அறிவில் உயர்த்த சமூகமாக இருந்தோம் என்றுதானே வரலாறு சொல்கிறது.ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கி கருவிகள் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தோம் என்று உறுதியாக சொல்கிறதே.நாம் கட்டிட கலைக்கு சான்றாக கல்லணை உள்ளதே.இன்னும் பலவகையில் நாம் முன்னேறி இருந்தோம் என்பதற்க்கு சாட்சி சிந்து நாகரீகம் ,நாளந்தா இன்னும் பல.பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் என்பதற்காக நம்மை நாமே மட்டம் தட்டி கொள்வது சரியா?
    2.தமிழ்நாட்டில் இந்து முஸ்லிம் பகை இல்லை என்றால் அது இந்த மக்களின் தன்மை.சேராமான் பெருமாள் பல ஆண்டுகள் முன்பே முஸ்லிம் ஆக மாறியவர்.இங்கே நாம் காலம் காலமாக அப்படித்தான் இருந்தோம்.இன்றும் இருக்கிறோம்.இதில் பெரியார் எங்கே வந்தார்?அவர் இந்து மதத்தையும் பார்ப்பனர்களையும் தீவிரமாக எதிர்த்தார்.எப்போது அவர் மத நல்லிணக்கம் பற்றி பேசினார்? தமிழ்நாட்டில் நல்லது எது நடந்தாலும் உடனே அதற்க்கு காரணம் பெரியார் என்பதும் ஒரு மூட நம்பிக்கை இல்லையா? to be continued

    ReplyDelete
  2. continued
    3.முக்குலத்தோர் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறீர்கள்.கள்ளரும் மறவரும் சம்பந்தம் செய்து கொள்வார்களா?அப்புறம் என்ன முக்குலத்தோர்?வாக்குக்காகவா?என்று போகிறது உங்கள் உரை.
    என் சந்தேகம் என்னவென்றால் பள்ளர் மற்றும் பறையர் சம்பந்தம் செய்து கொள்வதில்லயே?பின் அங்கு மட்டும் ஏன் ஒன்றாக தாழ்த்தப்பட்டோர் என்று இணைக்கிறீர்கள்?அதுவும் ஒட்டுக்காக தானா?
    4.பாண்டிய மன்னரின் மூத்த மகனுக்கும் மூத்த மனைவியின் மகனுக்கும் நடந்த வாரிசு போட்டி பற்றி பேசும் நீங்கள் மன்னர்கள் எப்போதும் அப்படித்தான்.பல மனைவி உண்டு. வாரிசு போட்டி உண்டு என்று பேசுகிறீர்கள்.யாரை மனத்தில் வைத்து அப்படி சொன்னீர்களோ?யாம் அறியோம்.ஆனால் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அப்படி பேச வாய்ப்பில்லை என்பது என் கருத்து.
    ஐயா இவை எல்லாம் என் சந்தேகங்களே.என் அறியாமயால் வந்தது.குற்றச்சாட்டுகள் அல்ல.தகுந்த விளக்கம் வேண்டி காத்திருக்கிறேன்.கடைசியாக சொன்னது(4) ஒரு நகைச்சுவைக்காக.தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.நன்றி.

    ReplyDelete