தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday 22 March 2017

வலி 4 - ஊர்ச்சோறு உண்ணும் அவலம்


1980களின் தொடக்கம். அப்போது நான் எழுதிக்கொண்டிருந்த பகத்சிங்கும் இந்திய அரசியலும் என்னும் நூலுக்காகப் பல்வேறு ஆவணங்களையும் தேடிக்கொண்டிருந்தேன். அவரும், அவருடைய நண்பர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டது 1931 ஆம் ஆண்டு என்பதால், அந்த ஆண்டில் வெளிவந்த ஆங்கில, தமிழ் நாளேடுகளை எல்லாம், சென்னை, தில்லி ஆவணக் காப்பகங்களில் படிக்கத் தொடங்கியிருந்தேன். அப்போதுதான் அந்த அதிர்ச்சிச் செய்தி ஒரு தமிழ் ஏட்டில் இடம்பெற்றிருந்ததைப் பார்த்தேன். நெல்லைக்கு அருகில் ஒரு சிற்றூரில் புரத வண்ணார் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து அடித்தார்கள் என்பதே அந்தச் செய்தி. அவர் பகலில் நடமாடிய குற்றத்திற்காக அந்தத் தண்டனை வழங்கப்பட்டது என்ற குறிப்பும் அந்தச் செய்தியில் இருந்தது.

மேலும் படிக்க


2 comments:

  1. வணக்கம் ஆசிரியர் ஐயா,,,, உங்களின் வலி கட்டுரை ஒவ்வொன்றும் படிக்கும் போதே இதயத்தில் மீளா வலி ஏற்படுகிறது, படிப்பதற்கே இவ்வாறு என்றால் வாழ்பவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் ! எண்ண மூடியா துயரங்கள்

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,
    தாழ்மையான வேண்டுகோள்
    தாங்கள் பங்கேற்க்கும், குறிப்பாக சென்னை, மேடைபேச்சுகளின் விவரங்களை முன்கூட்டி பதிவு செய்தாள் பங்கெற்க எளிதாக இருக்கும்.

    ReplyDelete